சிறை துறை காவலர் திடீர் மரணம்...நாகர்கோவிலில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறை துறையில் பணியாற்றி வந்த காவலர் தினேஷ் என்பவர் திடீர் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட சிறைசாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் தினேஷ். நேற்று முன்தினம் இரவு தனது பணியினை முடித்து விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டில் அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது. பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகள் தொந்தரவு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்காலாம் என்ற புகாரும் எழுந்துள்ளது. சிறைத்துறை காவலரின் திடீர் மரணம்,குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காவலர் தினேஷ்க்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications