மின்கம்பி அறுந்து விழுந்து சேலம் பயணிகள் ரயில் படிக்கட்டில் நின்றவர் பலி
மின்கம்பி அறுந்து விழுந்ததில் சேலம் பயணிகளில் ரயில் படிக்கட்டில் நின்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மின்கம்பி அறுந்து விழுந்ததில் சேலம் பயணிகளில் ரயில் படிக்கட்டில் நின்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து சேலம் நோக்கி வெஸ்டகோஸ்ட் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

சாமல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மேலே சென்ற மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த பயணி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பயணி உயிரிழந்ததை அடுத்து ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சேலம் ஜோலார்பேட்டை தடத்தில் மேலும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் கடந்த 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications