டாஸ்மாக் போதை தலைக்கேறி தலைகுப்புற விழுந்த பள்ளி மாணவன்.. இது நெல்லை சோகம்
தென்காசி: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பள்ளி மாணவர் ஒருவர் மதுபோதை தலைக்கேறிய நிலையில், சாலையோரம் விழுந்து கிடந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவர்கள் சிலர் நேற்று வகுப்பை புறக்கணித்துவிட்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று சேர்ந்து குடித்துள்ளனர். அதில், ஒரு மாணவனுக்கு போதை தலைக்கேறியதால் அங்கேயே தள்ளாடிக் கொண்டு இருந்துள்ளார்.
சக மாணவர்கள், போதை தலைக்கேறிய மாணவனை தெளியவைக்க எடுத்த முயற்சிகள் வீணாகின. எனவே அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் அந்த மாணவன் மட்டும், தட்டுத் தடுமாறியபடி அங்கிருந்து வந்து சாலையில் தடுமாறியபடி கீழே விழுந்து கிடந்துள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த மாணவனை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அந்த சிறுவனை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
சில தினங்களுக்கு முன்புதான் கோவையில் பள்ளிமாணவி ஒருவர் தனது தோழிகளுடன் மது அருந்தி வீதியில் கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. சமீபத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தோழியருடன் மது அருந்தும் வீடியோ வாட்ஸ்சப்பில் பரவியது. இப்போது மாணவன் ஒருவர் இதேபோல நடந்துகொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications