இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்.. சென்னை பெரம்பூரில் டெல்லி போலீசார் விசாரணை

டிடிவி தினகரன் மீதான புகார் குறித்து சென்னை பெரம்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக சென்னை பெரம்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தினகரனை டெல்லி போலீசார் 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது. தொடர்ந்து சென்னைக்கு டிடிவி தினகரன் கொண்டுவரப்பட்டார்.

A Team of Delhi Police today investigation at perambur

முதலில் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தினகரன் வீட்டில் அவரது மனைவி அனுராதா முன்னிலையிலும் சுமார் 6 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ராஜாஜி பவனுக்கு அழைத்துச்செல்லப்பட்டார் தினகரன். தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே டெல்லி போலீசின் 5 பேர் கொண்ட குழு இன்று பெரம்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+