நாட்றம்பள்ளியில்.. நள்ளிரவில் வீசிய சூறாவளி.. முறிந்து விழுந்த வேப்ப மரம்.. 6 வயது சிறுமி பரிதாப பலி
நாட்றம்பள்ளியில் மரம் முறிந்து விழுந்து, சிறுமி உயிரிழந்தாள்
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கனமழையின் காரணமாக, மரம் முறிந்து, கூரை வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அசானி புயல் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அந்த வகையில், நேற்றிரவு சென்னையில் மிதமான மழை பெய்தது... அதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது..

மழை
டெல்டா மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் நல்ல மழை நேற்றில் இருந்து பெய்து வருகிறது... தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவு முதலே பலத்த காற்று வீச ஆரம்பித்துவிட்டது.. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதுமே நல்ல மழை பெய்தது.. ஆம்பூர், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி, வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 10 மணி முதல் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்ட ஆரம்பித்தது...

நாட்றம்பள்ளி
இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய பெய்து கொண்டேஇருந்தது.. இதில், நாட்றம்பள்ளி அருகே கனமழையின் காரணமாக மரம் முறிந்து, கூரை வீட்டின் மீது விழுந்ததில் பெண் குழந்தை பலியான சோகம் நடந்துள்ளது.. நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை பகுதியில் வசித்து வரும் தம்பதி கிருஷ்ணாபாலு - சத்யா.. இவர்களுக்கு 6 வயதில் தேவிகா என்ற மகளும், கவின் என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்றிரவு இவர்கள் 4 பேரும் வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்..

வேப்பமரம்
அப்போது, நள்ளிரவு 2 மணி இருக்கும்.. வீட்டின் அருகே இருந்த வேப்ப மரம் முறிந்து கூரை வீட்டின் மீது திடீரென விழுந்தது.. அந்த சத்தத்தை கேட்டு சுதாரித்துக் கொண்ட சத்யாவும் கிருஷ்ணாபாலுவும் வெளியே ஓடிவந்தனர்.. சத்யா 2வது குழந்தை கவினை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.. ஆனால் மரக்கிளையின் இடுக்கில் கிருஷ்ணாபாலு மாட்டிக் கொண்டார்.. எனினும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.. ஆனால் தேவிகா 6 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.

விசாரணை
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications