பழனி அருகே வேன் மீது லாரி மோதி கோர விபத்து.. கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பழனி அருகே வேன் மீது லாரி மோதி கோர விபத்து- வீடியோ

    திண்டுக்கல்: பழனி அருகே மாருதி ஆம்னி மீது லாரி மோதியதில் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, சித்தலவாடம்பட்டியில் நள்ளிரவில் நடந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர்.

    A truck collided with Maruti Omni near Palani, killing 6

    பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    A truck collided with Maruti Omni near Palani, killing 6

    உயிரிழந்த 6 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோட்டையத்தை சேர்ந்த அவர்கள், பழனி கோயிலுகு வந்துவிட்டு திரும்பியபோது, இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    A truck collided with Maruti Omni near Palani, killing 6

    லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதியதால், வேன் அப்பளம் போல நொறுங்கியது. ரத்த வெள்ளத்தில், அதில் பயணித்தவர்கள் அதே இடத்தில் இறந்து கிடந்த காட்சி காண்போர் நெஞ்சங்களை பதறச் செய்வதாக இருந்தது. அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து தடை பட்டது.

    A truck collided with Maruti Omni near Palani, killing 6

    இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+