கள்ளக்காதலால் டிரைவருடன் ஓடிய பெண்.. மோகம் தீர்ந்து கள்ளக்காதலன் விலகியதால் தீக்குளித்து பலி!
நாமக்கல் அருகே டிரைவருடனான கள்ளக்காதலால் புருஷனை விட்டு ஓடிய பெண் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

நாமக்கல்: குமாரபாளையம் அருகே கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் அவர் மோசடி செய்து ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவருக்கு வயது 46. இவர் கணவர், மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பார்வதியின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் பார்வதிக்கு தங்கள் வீட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்த 42 வயது ஈஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டது.

தனிமையில் உல்லாசம்
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்
இது அரசல்புரசலாக கணவருக்கு தெரிய வரவே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார் பார்வதி. கள்ளக்காதலர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

மஜாவில் திளைத்த பார்வதி
ஈஸ்வரனுடன் கள்ளக்காதல் மஜாவில் திளைத்த பார்வதி தன் பெயரில் இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்று தனது கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்துள்ளார்.

தீர்ந்துபோன மோகம்
கள்ளக்காதலன் ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பார்வதி மீதான மோகம் தீர்ந்ததால் ஈஸ்வரன் அவரை விட்டு விலகியுள்ளார்.

விலகிய ஈஸ்வரன்
ஒரு கட்டத்தில் பார்வதியின் வீட்டிற்கே செல்லாமல் இருந்துள்ளார் கள்ளக்காதலன் ஈஸ்வரன். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி ஈஸ்வரனின் வீட்டிற்கு சென்று தன்னிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

தகாத வார்த்தையால்
ஆனால் பணத்தை திருப்பி தர மறுத்த ஈஸ்வரன் மனைவி மல்லிகா மற்றும் மைத்துனர் ஜம்புவுடன் சேர்ந்து மிரட்டியுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

தொடர்ந்த மிரட்டல்
இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதி கடந்த 8ஆம் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து குமாரப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையறிந்த ஈஸ்வரன் தனது குடும்பத்துடன் வந்து பார்வதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு ஆபாசமாக பேசியுள்ளார்.

தீக்குளித்த பார்வதி
இதனால் கடும் மன உளைச்சல் மற்றும் விரக்திக்கு ஆளான பார்வதி கடந்த 19ஆம் தேதி மாலை குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு முன்பு திடீரென உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீக்குளித்தார்.

உயிரிழப்பு
இதனைக்கண்ட போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடலில் பற்றிய தீயை அணைத்து ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

அனைத்தையும் இழந்தார்
கட்டிய கணவனை விட்டுவிட்டு கார் டிரைவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடி வந்த பார்வதி மானம், மரியாதை மற்றும் பணத்தை இழந்ததோடு தற்போது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications