சசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது!
சசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததா சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததா சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் இளம்பெண் பிரியதர்ஷினி. இவர் தன்னை சசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

மேலும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளையும் பிரியதர்ஷினி மோசடி செய்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோசடி செய்த பிரியதர்ஷி தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பிரியதர்ஷினியை சென்னை கொண்டு வந்து விசாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications