புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் கார்டு கட்டாயம்: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை
புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் கார்டு கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் கார்டு கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில்,புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய ஆதார் கார்டு கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதேபோல், வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண், மொபைல் எண் ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications