மார்ச் 9ஆம் தேதி மீண்டும் ஆஜராக விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இதையடுத்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரண ஆணையம் அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக பலருக்கு விசாரணைக்கு கமிஷன் சம்மன் அனுப்பி வருகிறது. இந்நிலையில் அண்மையில் விசாரணை கமிஷன் ஜெயா டிவியின் சிஇஓவும் இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியது.
இதுதொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜரான விவேக் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவில்லை என கூறினார். இந்நிலையில் விவேக் ஜெயராமனுக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 9ஆம் தேதி விவேக் ஜெயராமன் மீண்டும் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி கமிஷன் சம்மனில் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications