ஆவின் பூத்துகளில் இன்று முதல் "மெஷினில்" பால் வராது!
சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் பூத்துகளில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் பால் விற்பனை இன்று முதல் நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் ஆவின் நிர்வாகத்துக்குச் சொந்தமாக 215 தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்த நிலையங்களுக்கு பால் வண்டிகளில் பால் விநியோகம் செய்யப்படுகிறது.

30 ஆயிரம் லிட்டர் விற்பனை:
இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் ஆவின் பால் டேங்கர்களில் நடைபெற்ற கலப்படம் கண்டறியப்பட்டது.
பால் கலப்படம்:
அதையடுத்து, ஆவின் நிர்வாகம் பால் கலப்படம் நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தானியங்கி இயந்திரங்கள்:
அந்த வரிசையில் ஆவின் பூத்துகளில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் சில்லறையாக வழங்கப்படும் பால் விற்பனையை நிறுத்தும் முடிவை ஆவின் நிர்வாகம் எடுத்தது.
விற்பனை நிறுத்தம்:
அதன்படி வியாழக்கிழமை முதல் தானியங்கி இயந்திரத்தில் பால் விற்பனை நிறுத்தப்படுகிறது என ஆவின் நிர்வாகம் அறிவித்தது.
781 விற்பனை நிலையங்கள்:
இதுகுறித்து ஆவின் நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, "சென்னை, புறநகர் பகுதிகளில் 781 பால் விற்பனை நிலையங்கள், 93 பாலகங்கள், தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், மாதாந்திர பால் அட்டைகள் ஆகியவற்றின் வாயிலாக ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.
பால் வண்டிகளில் விநியோகம்:
நாள் ஒன்றுக்கு சராசரியாக 11.28 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இவற்றில் தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், ஒரு சில தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, பால் வண்டிகளில் ஆவின் நிர்வாகம் பாலை விநியோகம் செய்து வந்தது.
கலப்படத்தால் நிறுத்தம்:
கலப்படம் தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, தானியங்கி இயந்திரம் மூலம் சில்லறையாக வழங்கப்படும் பால் விற்பனை முற்றிலும் நிறுத்தம் செய்யப்படுகிறது.
-
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications