செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கிறேன்... மதானி வேதனை

Subscribe to Oneindia Tamil

கொல்லம்: நிரபராதியான நான் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன் என பெங்களூருவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவர் அப்துல் நாசர் மதானி தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கேரளா மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி கடந்த 2010 ஆகஸ்டில் கர்நாடக போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Abdul Nasser Madani arrives home, meets parents

இந்நிலையில் தனது தாயாரின் உடல் நலம் குறைவு காரணமாக பரோலில் வெளியே வந்துள்ள அவர் பெங்களூருரில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார். அவருடன் பாதுகாப்பிற்கு கர்நாடக போலீசாரும் வந்துள்ளனர்.

பெற்றோரைச் சந்தித்த மதானி, இன்று காலை கேரள மாநிலம் கொல்லத்தில் ரம்ஜான் பண்டிகை தொழுகையில் கலந்து கொண்டார்.

பின்னர் அங்கு கூடி இருந்த தனது ஆதரவாளர்களிடம் அவர் பேசியதாவது:

"6வருடங்களுக்குப் பின் சொந்த மண்ணில் உங்களோடு இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன். தற்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தொடர்பில்லாத வழக்கில் சிறையில் தண்டனை அனுபவிக்கிறேன்.

நான் நிரபராதி. ஆனால் சிறையில் வாழ்கிறேன். சாதாரண மனிதர்களின் வேதனைகளை ஜாதி, மதம், கடந்து தங்களது வேதனையாகவே கருத வேண்டும். அனைவரிடமும் சகோதரத்துவத்தோடு பழகிட வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+