30-ஆம் தேதியே கணவருக்கும், குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த அபிராமி... திடுக் தகவல்
Recommended Video

சென்னை: 30-ஆம் தேதியே கணவருக்கும் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்ததாக அபிராமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.
இந்நிலையில் அவர் இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிவித்தார்.

சுந்தரம்
இதுகுறித்து அபிராமி கூறுகையில் 2 மாதமாக கள்ளக்காதலில் தீவிரமாக இருந்ததால் என்னால் விட முடியவில்லை. இதனால் என்ன செய்யலாம் என யோசித்தபோது கணவரையும் குழந்தைகளையும் கொன்றுவிடும் படி சுந்தரம் ஐடியா கொடுத்தார்.

பாலில் விஷம்
அதன்படி கடந்த 30-ஆம் தேதியே மூன்று பேரையும் கொல்ல திட்டமிட்டேன். இந்நிலையில் 30-ஆம் தேதி இரவு 3 பேருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தேன். மறுநாள் அனைவரும் இறந்து கிடப்பர். நாம் சுந்தரத்துடன் தப்பி எங்காவது சென்றுவிடலாம் என்றிருந்தேன்.

முத்தம் கொடுக்க சென்ற விஜய்
ஆனால் மருந்தின் வீரியம் குறைவாக இருந்ததால் மறுநாள் 31-ஆம் தேதி காலை விஜய்யும் மகன் அஜய்யும் எழுந்துவிட்டனர். ஆனால் கார்னிகா மட்டும் எழவில்லை. அவளை தொட்டு பார்த்தபோது அவள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது வழக்கம்போல் அலுவலகத்துக்கு கிளம்பிய விஜய், கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்க சென்றபோது அவரை தடுத்தேன்.

எழுந்துவிடுவாள்
குழந்தை அசந்து தூங்குகிறாள், நீங்கள் அருகே சென்றால் எழுந்துவிடுவாள் என்று கூறியதால் விஜய்யும் அதை நம்பி குழந்தையை தொடாமல் சென்றுவிட்டார் என்றார் அபிராமி.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications