கள்ளக்காதலன் சுந்தரம் மட்டுமின்றி பலருடன் ரொமான்டிக் டப்ஸ்மேஷ் வெளியிட்ட அபிராமி!!
Recommended Video

சென்னை: கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 2 குழந்தைகளை கொன்ற அபிராமி சுந்தரம் மட்டுமின்றி பலருடன் ரொமான்டிக் டப்ஸ்மேஷ்களை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்காதல், காமவெறி, உல்லாச வாழ்க்கை போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு பெற்ற குழந்தைகளை கொன்று வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி.
அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கள்ளக்காதலன் சுந்தரத்துடன் ரொமான்டிக் டப்ஸ்மேஷ் செய்து அபிராமி வெளியிட்ட டப்ஸ்மேஷ் வீடியோ வெளியானது.

அபிராமி டப்ஸ்மேஷ்
சினிமாவில் வரும் பாடல் வரிகள், பிரபலமான வசனங்கள் போன்ற காட்சிகளுக்கு ‘டப்ஸ்மேஷ்' மூலம் அபிராமி தானே நடித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சுந்தரத்துடன் டப்ஸ்மேஷ்
இப்போது அந்த ‘டப்ஸ்மேஷ்' வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுந்தரத்துடன் நைட்டெல்லாம் எனக்கு யாரு இருக்கா என கேட்பது முதல் ஏராளமான வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரொமான்டிக் வீடியோக்கள்
மற்றொரு வீடியோவில் ‘என்னவளே... என்னவளே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடித்துள்ளார். இதுபோன்ற பல வீடியோக்கள் இப்போது ‘பேஸ்புக்', ‘வாட்ஸ் அப்' போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

கண்களை சிமிட்டி, உதட்டைகடித்து
இதில் அபிராமி கண்களை சிமிட்டுவது, உதட்டை கடிப்பது, நாக்கை கடிப்பது, வெட்கப்படுவது என பலவிதமாக நடித்துள்ளார்.

பலரும் எதிர்ப்பு
இந்த வீடியோக்களை பார்த்த பலரும் அபிராமியை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அபிராமியின் செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சுந்தரம் மட்டுமின்றி
சுந்தரம் மட்டுமின்றி பலருடனும் அபிராமி ரொமான்டிக் டப்ஸ்மேஷ்களை வெளியிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் அபிராமி வைரலாகியுள்ளார். அவரை டப்ஸ்மேஷ், மியூசிக்கலி போன்ற ஆப்களில் சுமார் 7000 பேர் பின்தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications