தமிழக ரிசர்வ் தொகுதிகளில் மீண்டும் அதிகபட்ச வாக்குகள் பதிவு
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் 2009ம் ஆண்டைப் போலவே மீண்டும் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தின் வாக்குப் பதிவு சதவீதத்தில் மாநகரங்களைக் காட்டிலும், சிறுநகரங்கள் சாதனை படைத்துள்ளன.
சிறுநகரங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், சென்னை உள்பட சில மாநகரங்களில் 65 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின. தென் சென்னையில் 57.86 சதவீதமும், மத்திய சென்னையில் 60.90 சதவீதமும், வட சென்னையில் 64.63 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சென்னையைத் தவிர்த்து பிற மாநகரங்களான கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகியவற்றில் வாக்குப் பதிவானது 60 முதல் 70 சதவீதத்துக்குள்ளாகவே இருந்தது.

நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப் பதிவு சதவீதத்தில் சிறுநகரங்களே சாதனை படைத்து வருகின்றன. குறிப்பாக தருமபுரி, கரூர் உள்ளிட்டவை ஒவ்வொரு தேர்தலிலும் முதல் மூன்று இடத்துக்குள் வந்து விடுகின்றன.
கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 81.35 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது, 79.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் முதலிடத்தில் இருந்த கரூர் இந்தத் தேர்தலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை தருமபுரி தொகுதி கைப்பற்றியுள்ளது.
அந்தத் தொகுதியில் 80.99 சதவீத வாக்குகள் பதிவாகி, மாநிலத்திலேயே அதிகபட்ச வாக்குகள் பதிவான தொகுதி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சிறுநகரங்களில் கிருஷ்ணகிரி, அரக்கோணம், திண்டுக்கல், கடலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி என பல்வேறு தொகுதிகளில் வாக்குப் பதிவு 77 சதவீதத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, தனித் தொகுதிகளில் சிறப்பான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் தனித் தொகுதியைத் தவிர்த்து மற்ற ஆறு தனித் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு 70 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
திருவள்ளூரில் 74.75 சதவீதமும், விழுப்புரத்தில் 76.02 சதமும், நீலகிரியில் 74.3 சதவீதமும், சிதம்பரத்தில் 79.85 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 76.69 சதமும், தென்காசியில் 74.3 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. காஞ்சிபுரத்தில் மட்டும் 64.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அனைத்து தனித் தொகுதிகளிலும் 70 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications