For Quick Alerts
For Daily Alerts
Just In
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் படுகாயம்
விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடி விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
Blast happened at a cracker factory near Sattur on tuesday. 2 workers have got badly injured in this incident.
Story first published: Tuesday, December 12, 2017, 8:16 [IST]