என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள்.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் அழகிரி!
என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை: என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து 2014ஆம் ஆண்டு நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதி மறைவுக்கு பிறகும் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அவரை கட்சியில் சேர்க்க திமுக செயல் தலைவரான ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
இதனால் அதிருப்தியில் உள்ளார் அழகிரி. ஸ்டாலின் தரப்புக்கு தனது பலத்தை காட்டியே ஆகவேண்டும் என்றும் கட்டாயத்தில் உள்ள அழகிரி வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

சென்னையில் பேரணி
சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று கூறிய அழகிரி, அன்றைய தினம் ஆதங்கத்தை தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

தனிக்கட்சி?
மேலும் வெயிட்டான பொறுப்போடு அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படாத நிலையில் அவர் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அழைப்பு விடுக்கவில்லை
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பேரணி குறித்து பேசினார். சென்னையில் நடைபெறும் பேரணி குறித்து எந்த தலைவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

தொண்டர்கள் தான் தலைவர்கள்
என்னை பொருத்தவரை தொண்டர்கள் தான் தலைவர்கள். மதுரையில் நாளை தொண்டர்களை சந்திக்கவுள்ளேன். இவ்வாறு அழகிரி கூறினார். தொண்டர்களை நாளை சந்திக்கவுள்ள அழகிரி அவர்களிடம் முக்கிய கருத்துக்களை கேட்கலாம் என தெரிகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications