சென்ட்ரல் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்- ஏர்போர்ட்டில் நாராயணசாமி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து தனது தொகுதியான புதுச்சேரிக்கு வரும்போதெல்லாம் சென்னை ஏர்போர்ட்டில் நிருபர்களுக்கு ஏதாவது ஒரு பேட்டி கொடுப்பது வழக்கம். பெரும்பாலும் அது நீண்ட கால பிரச்னைகள், சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதாகத்தான் இருக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அடுத்த வாரத்தில் அல்லது அடுத்த 15 நாட்களுக்குள் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும் என்று கூறிவந்தார்.
இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் இன்று அவர் சென்னை விமான நிலையத்தி்ல நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்;
தமிழக அரசும், உள்துறை அமைச்சகமும் இணைந்து குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே உரசல் இருப்பதாக கூறி பிரச்னையை யாரும் உருவாக்க வேண்டாம். குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்துகிறது.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த உடன் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். எங்கப்பா நாராயணசாமியை இன்னும் காணோமே என்று பார்த்தோம் என்று நிருபர்கள் பேசிக்கொண்டனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications