பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு.. கள்ளக்காதலன் கைது! பரபரப்பு வாக்குமூலம்
வேலூர் அருகே பெண் போலீஸ் மீது ஆசிட் வீசியது அவரது கள்ளக்காதலன் என தெரியவந்துள்ளது. பெண் போலீஸ் மீது ஆசிட் வீச வேறுறொரு போலீஸ்காரர் திட்டம் போட்டுக்கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலூர்: வேலூர் அருகே பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதால் முகத்தில் ஆசிட் வீசயதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா திருப்பத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற கணவரும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர் கடந்த 23 ஆம் தேதி திருப்பத்தூர் காவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது மர்ம நபர்கள் லாவண்யாவின் முகத்தில் ஆசிட் வீசினர். இதில் முகம் மற்றும் கைகள் வெந்த நிலையில் லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரபாகரன் என்வரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் பிரபாகரனுக்கும் பெண் போலீஸ் லாவண்யாவுக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக லாவண்யா பிரபாகரனிடம் சரிவர பேசாமல் வேறு பல ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது நண்பர்களிடம் லாவண்யா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பிரபாகரனை போனில் தொடர்பு கொண்ட லாவண்யா தன்னை வீட்டில் கொண்டு போய்விடும்படி கூறியுள்ளார்.
அதற்கு உன் அண்ணன் வீட்டில் இருந்து வந்து அழைத்து செல்கிறேன் என்று கூறிய பிரபாகரன், அவர் செல்லும் வழியில் தனது நண்பர்களை அனுப்பி ஆசிட் வீசச்செய்ததாக தெரிவித்துள்ளார். லாவண்யா மீது ஆசிட் வீச, திருப்பத்தூரைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தான் பிளான் போட்டு தந்ததும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரித்து வரும் போலீசார் தலைமறைவாக உள்ள பிரபாகரனின் நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனே பெண் போலீஸ் மீது வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications