அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கென தேர்வுகள் இல்லாததால்தான் 'தெர்மாகோல் கூத்து' ஆனந்தராஜ் பொளேர்
மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது போல் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கு தேர்வு இல்லாததால் இந்த தெர்மாகோல் கூத்துகள் அரங்கேறுகின்றன என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
சென்னை: மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது போல் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கு தேர்வு இல்லாததால் இந்த தெர்மாகோல் கூத்துகள் அரங்கேறுகின்றன என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை ஆனந்தராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தண்ணீரை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று குடிக்க, மற்றொன்று பயன்பாட்டுக்கு என்பதாகும்.
கடல் நீரை குடிராக்கும் முறையை கொண்டு வந்தால் மட்டுமே தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்காக வாரி இறைத்த பணத்தை இந்த திட்டத்தில் செயல்படுத்தியிருக்கலாம்.
இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு எழுதியவுடன், முதுகலை மருத்துவப் படிப்பு படிக்க வேண்டுமென்றால் அதற்கென ஒரு நீட் தேர்வை எழுத வேண்டும். ஆனால் எம்எல்ஏ- ஆவதற்கென ஒரு தேர்வு உள்ளதா? சரி, அமைச்சர் ஆவதற்கு முன்பாகவாவது தேர்வு ஏதேனும் நடத்துப்படுகிறதா?
அமைச்சர்களின் தகுதியை சோதிக்காததால்தான் வைகை அணையில் தெர்மாகோல் போட்டு நீர் ஆவியாதலை தடுத்த சம்பவங்கள் அரங்கேறின. இன்னும் பந்து மூலம் ஆவியாதலை தடுக்க போகிறார்களாம். அது அமெரிக்காவில் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த திட்டத்தை இங்கு செயல்படுத்தினால் கொடிய விஷயமாகும். தண்ணீரில் பந்துகளை காணும் குழந்தைகள் அதை பிடிக்க செல்வர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் என்றார் அவர்.