ஜல்லிக்கட்டுக்கு தடை... தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.. கார்த்திக் தரும் "வார்னிங்"!
மதுரை: மத்திய அரசும், தமிழக அரசும் மாறி மாறி குறை கூறி ஜல்லிக்கட்டை நிறுத்தி விட்டனர். இது நிச்சயம் வரும் சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்றும் அலங்காநல்லூரில், கிராம மக்கள், மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று மதியம் கார்த்திக் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
5000 ஆண்டுகளாக நடந்து வந்த ஜல்லிக்கட்டை தடை செய்திருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட ஜல்லிக்கட்டு தடை செய்யப்படவில்லை. ஆனால் தற்போது, மத்திய - மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நிறுத்திவிட்டனர். ஜல்லிக்கட்டை முழுமையாக நடத்த மத்திய-மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறாவிட்டால் அதன் பாதிப்புகள் வருகிற சட்டசபைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications