மெரினாவில் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு.. ஒரு பிரிவு இளைஞர்கள் கலைகிறார்கள்!
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஆளுநர் கூறியிருப்பதை ஏற்று அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் சமதான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஆளுநர் உரையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமாக்கப்படும் என கூறப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து ஒரு பிரிவு மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பலர் கலையாமல் உள்ளனர்.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதையடுத்து சிதறியோடிய போராட்டக்குழுவினர் கடலோரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களிடம் பேசிய நடிகர் லாரன்ஸ் ''ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிரந்தரமாக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். அரசின் உறுதியை மதுரை அலங்காநல்லூர் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்களைப் போல் நாமும் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும். ஆளுநர் கூறியிருப்பதை அனவைரும் ஏற்க வேண்டும்.
தடியடி நடத்தியதற்கு காவல்துறை போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது''. இவ்வாறு நடிகர் லாரன்ஸ் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். இதையடுத்து ஒரு பிரிவு மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பலர் கலையாமல் உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications