மெரினாவில் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு.. ஒரு பிரிவு இளைஞர்கள் கலைகிறார்கள்!
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஆளுநர் கூறியிருப்பதை ஏற்று அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் சமதான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஆளுநர் உரையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமாக்கப்படும் என கூறப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து ஒரு பிரிவு மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பலர் கலையாமல் உள்ளனர்.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதையடுத்து சிதறியோடிய போராட்டக்குழுவினர் கடலோரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களிடம் பேசிய நடிகர் லாரன்ஸ் ''ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிரந்தரமாக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். அரசின் உறுதியை மதுரை அலங்காநல்லூர் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்களைப் போல் நாமும் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும். ஆளுநர் கூறியிருப்பதை அனவைரும் ஏற்க வேண்டும்.
தடியடி நடத்தியதற்கு காவல்துறை போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யக்கூடாது''. இவ்வாறு நடிகர் லாரன்ஸ் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். இதையடுத்து ஒரு பிரிவு மாணவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பலர் கலையாமல் உள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications