வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய லதா ரஜினிகாந்த்
சென்னை: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறார்.
வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் நிதி திரட்டி கொடுத்து வருகிறது. இந்த நோக்கிற்காக ரஜினிகாந்த் ரூ.10 லட்சமும், கமல் ரூ.15 லட்சமும் இன்னும் பல நடிகர்களும் லட்சக்கணக்கில் உதவித் தொகைகளை வழங்கியுள்ளனர்.

இதுதவிர, நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்களை வரவழைத்து, அங்கிருந்து கடலூர், தூத்துக்குடி போன்ற மாநிலத்தில் மழை பாதித்த பல பகுதிகளுக்கும் நிவாரண பொருட்களை விளம்பரம் இல்லாமலே அனுப்பும் பணி தொடர்வதாக ரஜினிகாந்த்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இந்த பணிகளை ரஜினியின் இரு மகள்களும் ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல லதா ரஜினிகாந்த், தனது கையால் பலருக்கும் நேரடியாக உதவி வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, சேலைகள், பாய், குழந்தைகளுக்கான உணவு என பல்வேறு பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் சார்பில் லதா ரஜினிகாந்த் வழங்கி வருகிறார்.
அரிசி மூட்டை, பாய், சேலைகள், பிஸ்கெட், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள்d பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications