என் தாயின் வாழ்த்து போல உணர்கிறேன்.. நடிகர் ரஞ்சித் நெகிழ்ச்சி
Recommended Video
சென்னை: பாமகவில் இணைந்துள்ள நடிகர் ரஞ்சித் தன்னை வாழ்த்தியவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். இதை தனது தாயே வாழ்த்துவது போல உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகர் ரஞ்சித் சமீபத்தில் பாமகவில் இணைந்தார். அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இது பாமகவினர் மத்தியிலும், பிறரது மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. பாமகவில் நடிகருக்கு முக்கியப் பதவியா என்று ஆச்சரியமாக பலரும் பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி கூறியுள்ளார் நடிகர் ரஞ்சித். தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இது பெருமையாக இருக்கிறது. நான் என்ன செய்தாலும் அதை வாழ்த்துவது பெருமையாக உள்ளது, பாசத்தை உணர முடிகிறது. இது எனது அம்மாவின் வாழ்த்துக்கு சமம் என்று அவர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் லைவ் வீடியோ: