ஆர்கே நகர் பணப்பட்டுவாடா... 5 கோடி வரி ஏய்ப்பு.. சரத்குமாரிடம் ஐடி அதிகாரிகள் 2 மணி நேர விசாரணை
ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா மற்றும் வரி ஏய்ப்பு குறித்து சரத்குமாரிடம் இன்று நடைபெற்ற 4வது நாள் விசாரணை முடிவடைந்தது.
சென்னை: நடிகர் சரத்குமாரிடம் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளதால் அவர் வருமான வரிதுறை அலுவலகத்தில் ஆஜரானார்.
ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது முக்கிய ஆவணங்களும், ரூ.89 கோடி பணமும் கைப்பற்றப்பட்டதால் அவர்களை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை
அதன்படி கடந்த திங்கள்கிழமை சரத்குமார், விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் 5 மணி நேரத்துக்கு அதிகமாக விசாரணை நடத்தப்பட்டது.

ராடன் அலுவலகம்
இந்நிலையில் நேற்று முன்தினம் சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ராடன் அலுவலகத்திலும் 8 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் குறித்தும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் விசாரணை
மேலும் அவரை மீண்டும் ராடன் அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவர் மீண்டும் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

5 கோடி வரி ஏய்ப்பு
இதில் சுமார் 5 கோடி ரூபாய் வரை சரத்குமார் ராதிகா வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து இன்று மீண்டும் ஐடி அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று சரத்குமாருக்கு உத்தரவிடப்பட்டது.

4வது முறையாக..
அதன் அடிப்படையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு நடிகர் சரத்குமார் ஆஜரானார். அவரிடம் வரி ஏய்ப்பு குறித்தும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின்னர் சரத்குமார் வெளியே அனுப்பப்பட்டார்.

ராதிகா வரவில்லை
இன்று ராதிகாவும் ஆஜராக வேண்டும் என்று ஐடி அதிகாரிகள் உத்தரவிட்ட போதிலும், ராதிகா இன்று விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications