Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்கே நகர் பணப்பட்டுவாடா... 5 கோடி வரி ஏய்ப்பு.. சரத்குமாரிடம் ஐடி அதிகாரிகள் 2 மணி நேர விசாரணை

ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா மற்றும் வரி ஏய்ப்பு குறித்து சரத்குமாரிடம் இன்று நடைபெற்ற 4வது நாள் விசாரணை முடிவடைந்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமாரிடம் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளதால் அவர் வருமான வரிதுறை அலுவலகத்தில் ஆஜரானார்.

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது முக்கிய ஆவணங்களும், ரூ.89 கோடி பணமும் கைப்பற்றப்பட்டதால் அவர்களை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை

விசாரணை

அதன்படி கடந்த திங்கள்கிழமை சரத்குமார், விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் 5 மணி நேரத்துக்கு அதிகமாக விசாரணை நடத்தப்பட்டது.

ராடன் அலுவலகம்

ராடன் அலுவலகம்

இந்நிலையில் நேற்று முன்தினம் சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ராடன் அலுவலகத்திலும் 8 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் குறித்தும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

மேலும் அவரை மீண்டும் ராடன் அலுவலகத்துக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவர் மீண்டும் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

5 கோடி வரி ஏய்ப்பு

5 கோடி வரி ஏய்ப்பு

இதில் சுமார் 5 கோடி ரூபாய் வரை சரத்குமார் ராதிகா வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து இன்று மீண்டும் ஐடி அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று சரத்குமாருக்கு உத்தரவிடப்பட்டது.

4வது முறையாக..

4வது முறையாக..

அதன் அடிப்படையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு நடிகர் சரத்குமார் ஆஜரானார். அவரிடம் வரி ஏய்ப்பு குறித்தும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின்னர் சரத்குமார் வெளியே அனுப்பப்பட்டார்.

ராதிகா வரவில்லை

ராதிகா வரவில்லை

இன்று ராதிகாவும் ஆஜராக வேண்டும் என்று ஐடி அதிகாரிகள் உத்தரவிட்ட போதிலும், ராதிகா இன்று விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+