For Daily Alerts
Just In
இனி மக்களுக்காக பாடுபட வேண்டும் - முதல்வருக்கு சரத்குமார் கோரிக்கை: வீடியோ
Recommended Video
அதிமுக அணிகள் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது-சரத்குமார் பேட்டி-வீடியோ
கரூர்: தமிழக மக்களுக்காக முதல்வர் இனி பாடுபட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்தார்.
கரூரில் திருமண விழாவில் கலந்துகொண்ட சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இனிமேலாவது முதல்வர் மக்களுக்கான பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்காக பாடுபட வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல வாக்குறுதிகளை கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்தார்.
அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற இந்த அரசு பாடுபட வேண்டும் என்று கூறினார். சரத்குமார் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய பிறகு பொதுவெளியில் அதிகம் பேசாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Actor Sarathkumar asked the government to work for the downtrodden people.