மெரினாவில் இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி.. சிம்பு கண்டனம் தெரிவித்து தர்ணா!

சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். இதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியை கண்டித்து நடிகர் சிம்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Actor simbu dharna in chennai

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 'ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை உச்சநீதிமன்றம் உடனடியாக நீக்க வேண்டும் எனவும், பீட்டா அமைப்பை தடைவிதிக்க வேண்டியும் விடிய விடிய அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான இளைஞர்கள் குவிந்து வருவதால் மெரினா திக்குமுக்காடி வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதனிடையே நேற்று இரவு 8 மணியளவில் சாலையில் நின்றிருந்தவர்களை அப்புறப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தடியடியை கண்டித்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதில் நடிகர்கள் விஜய் வசந்த், விஷ்ணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+