ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட... இந்திய தேர்தல் ஆணையத்தை நாடிய விஷால்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்ததால் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார் விஷால்.
Recommended Video

டெல்லி : ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்காக தமது வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை நடிகர் விஷால் நாடியுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஷாலும்,தீபாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புனுக்களை நேற்றைய தினம் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.

அப்போது ஆனால் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யவில்லை என்று கூறி தீபாவின் மனுவையும் முன்மொழிந்த 2 பேர் வேட்புமனுவில் உள்ளது தங்களது கையெழுத்து இல்லை என்பதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து விஷால் தண்டையார்பேட்டை அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேண்டுகோள் விடுத்தவுடன் விஷாலின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அதிகாரி அறிவித்தார்.
ஆனால் விஷால் வீடு திரும்பியதும் அவரது வேட்புமனுவை நிராகரித்ததாக அதிகாரி அறிவித்துவிட்டார். இதை கண்டித்து ஜனாதிபதி ராம் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு விஷால் டுவிட்டரில் தனது வேட்பு மனு நிராகரிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் விஷால் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications