ஜனநாயகத்தின் இன்னொரு கேலிக்கூத்து... தீபன், சுமதி வீடியோ குறித்து விஷால் கருத்துப்பதிவு!
தனது வேட்புமனுவை முன்மொழிந்த தீபன், சுமதி தேர்தல் அதிகாரி முன்பு வாக்குமூலம் அளிக்கும் வீடியோ பதிவிற்கு நடிகர் விஷால் பதில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை : தீபன், சுமதி ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி முன்பு வாக்குமூலம் அளிக்கும் வீடியோவை பதிவை சுட்டிகாட்டி நடிகர் விஷால் ஜனநாயகத்தின் இன்னொரு கேலிக்கூத்து என்று கருத்து பதிவிட்டுள்ளார். வீடியோவில் தீபன் நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல என்று சொல்வதாக விஷால் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திடீரென களமிறங்கிய நடிகர் விஷாலின் ஹீரோயிசம் வேட்பு மனு தாக்கலில் இருந்தே தொடங்கியது. மனு தாக்கலுக்கு வரிசையில் தான் வரவேண்டும் என்று சுயேச்சைகள் போர்க்கொடி பிடித்தன. இதனையடுத்து மனுக்கள் பரிசீலனையின் போது விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது.
விஷாலின் மனுவை முன்மொழிந்தவர்களில் இரண்டு பேர் பின்வாங்கியதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் வேட்பு மனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் மிரட்டப்பட்டதாக விஷால் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கான ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டார். தொடர்ந்து தேர்தல் அதிகாரியிடமும் இது குறித்து புகார் அளித்தார்.
இதனையடுத்து தேர்தல் அதிகாரி முன்னர் இரண்டு பேரையும் ஆஜர்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக விஷால் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தெரிவித்தார். எனினும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்ப்டடது.
Here is another instance of mockery of Democracy !!!
— Vishal (@VishalKOfficial) December 8, 2017
The person accepting that the signature made by him is not his.
He said & I quote, "Naan Potta Kaiyeludhu Enododhu Illai"
In Tamil " நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை " pic.twitter.com/akr19GJ7Ls
இதனிடையே தீபன், சுமதி இருவரும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முன்னர் இன்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவை சுட்டிக்காட்டி நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் இன்னொரு ஜனநாயக கேலிக்கூத்திற்கான சான்று இது. தேர்தல் அதிகாரி முன்னர் வாக்குமூலம் அளிக்கும் தீபன் நான் போடும் கையெழுத்து என்னுடையதல்ல என்று சொல்வதாக விஷால் அதில் குறிப்பிட்டுள்ளார்.