நல்ல தலைமை வந்தால் ஏற்க வேண்டியது நமது கடமை.. கமல் குறித்து மனம் திறந்த கவுதமி
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து நடிகை கவுதமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video

நாமக்கல் : அரசியலில் தலைமை என்பது தனி விஷயம், தலைமைக்கு சரியானவர்களை ஆதரிக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை நடிகை கவுதமி இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமருத்துவ முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : அரசியலில் தலைமை என்பது தனி விஷயம். இந்த தலைமைக்கு யார் சரியாக இருப்பார்களோ அவர்களை ஆதரிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு.

சரியான தலைமையை ஆதரிப்போம்
இன்றைய தலைமுறைக்கு ஏற்ப அரசியலில் யார் வந்தால் சரியாக இருக்குமோ அவர்களை ஆதரிக்க வேண்டும். இந்த கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்று கவுதமி கூறியுள்ளார்.

கமல் நட்பு முறித்த கவுதமி
அண்மையில் நடிகர் கமல்ஹாசனுடனான நட்பை முறித்துக் கொண்ட கவுதமி பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். நீட் விவகாரத்திலும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

முழுமூச்சுடன் பொது நிகழ்ச்சிகளில்
பொது நிகழ்ச்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வரும் கவுதமி பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இருப்பினும் அதுகுறித்து பகிரங்கமாக பேசாமல் உள்ளார் கவுதமி.

அரசியல் முக்கியத்துவம்
இந்நிலையில் தமிழக அரசியலில் தனிக்கட்சியைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் வருகை குறித்து கவுதமி தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications