ஒரு மிருகம் மட்டும் தப்பி விட்டானே... நடிகை கஸ்தூரி ஆவேசம்
சென்னை: நிர்பயா பாலியல் பலாத்கார மற்றும் கொலை வழக்கில் நான்கு பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்திருப்பதை நடிகை கஸ்தூரி வரவேற்றுள்ளார். அதேசமயம், ஒருவன் மட்டும் தப்பி விட்டது குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இளம் மாணவி நிர்பயா மிகக் கொடூரமாக 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு. மிருகங்களிடம் சிக்கி சீரழிந்த அவர் பின்னர் உயிரிழந்தார். இந்த கொடும் செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அதில் ராம்சிங் என்பவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டு விட்டான்.
மற்ற ஐந்து பேரில் ஒருவன் மைனர் என்பதால் அவனை மட்டும் சிறார் கோர்ட்டில் விசாரித்து கடந்த வருடம் விடுதலை செய்தது சட்டம். இத்தனைக்கும் இந்த கொடூரன்தான் நிர்பயாவை மிக மோசமாக சித்திரவை செய்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டவன். அப்போது அந்த கொடூரனுக்கு 16 வயதுதான் என்பது மிகப் பெரிய கொடுமை. அந்த காரணத்திற்காகத்தான் அவன் சிறார் சட்டத்தின் கீழ் போய் தப்பி விட்டான்.
இந்த நிலையில் தற்போது மற்ற 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதற்கு நடிகை கஸ்தூரி வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், ஒரே ஒரு மிருகம் மட்டும் தப்பி விட்டதாக அவர் ஆவேசப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கஸ்தூரி கூறுகையில், கிட்டத்தட்ட 5 வருடத்திற்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு மிருகம் மட்டும் சுதந்திரமாக அடியெடுத்து வைத்துள்ளான். அதை மட்டும்தான் என்னால் ஏற்க முடியவில்லை. இந்த தீர்ப்பு மிக மிக சக்தி வாய்ந்த தொடக்கமாக இருக்க வேண்டும்.
நிர்பயாவின் பெற்றோரின் கண்ணீரிலிருந்து சட்டப் புரட்சி தொடங்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை என்றார் கஸ்தூரி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications