ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை விஜயசாந்தி அஞ்சலி! அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டுகோள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகை விஜயசாந்தி அஞ்சலி செலுத்தினார். அப்போது அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை விஜயசாந்தி இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை விஜயசாந்தி இன்று மறைந்த முதல்வர் ஜெயலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியை பிளவுபடுத்த சதிகள் நடக்கும். அதனை முறியடித்து அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விஜயசாந்தி கேட்டுகொண்டார்.