கூடுதல் மெகா வாட் மின் உற்பத்தி - கூடங்குளம் அணு மின் நிலையம் சாதனை
நெல்லை கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கூடுதலாக 1725 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இந்த இரண்டு அணு உலைகளிலும் சேர்ந்து அதிகபட்ச மின் உற்பத்தி இதுவரை எட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதலாவது அணு உலையில் 775 மெகா வாட் மின் உற்பத்தியும், இரண்டாவது அணு உலையில் 950 மெகா வாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டது.
இரண்டு அணு உலைகளிலும் சேர்ந்து அதிகப்பட்சமாக 1725 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது தேசிய அளவில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு தாராப்பூரில் உள்ள அணு மின் நிலையம் அதிகபட்சமாக 1400 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது.
அங்கு நான்கு அணு உலைகள் மூலம் இந்த மின் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கூடங்குளத்தில இரண்டு அணு உலைகள் மூலம் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.