மே 29ல் அதிமுக அம்மா அணி மா.செ கூட்டம்... அடுத்த ஆப்ரேஷனா?
வருகிற திங்கட்கிழமை அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 29ம் தேதி காலை 11 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு, எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவு என பல நெருக்கடிக்கு மத்தியிலும் கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் இரட்டை இலை சின்ன விவாகரத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர கடந்த மாதம் 26ம் தேதி கூட்டப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்படி சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிக்னேச்சர் முடிந்து ஈபிஎஸ் தரப்பின் 12 ஆயிரத்து 500 பக்க ஆவணங்கள் கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் மே 29ம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மே 29ம் தேதி காலை 11 மணியளவில் கூடும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி கட்சி கைநழுவிப் போகாமல் இருப்பதற்கான அடுத்த ஆபரேஷனில் இறங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.