இரட்டை இலைச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!
அதிமுக அம்மா அணியின் வேட்பாளர்கள் இரட்டை இலைச்சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணியின் வேட்பாளர்கள் இரட்டை இலைச்சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக நிச்சயம் ஒன்றுபடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அதிமுக அம்மா அணியின் வேட்பாளர்க்ள இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். அணிகள் அணைப்பு அக்டோபர் 17ஆம் தேதிக்குள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தைதான் தற்போது அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.