நெல்லையில் பயங்கரம்.. நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக தொண்டர்
நெல்லை: நெல்லையில் அதிமுக தொண்டர் ஒருவர் நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் புட்புதரில் காலை ஆண் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட பார் ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக உதவி கமிஷனர் கந்தசாமி, பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலையான நபருக்கு வயது சுமார் 45 இருக்கலாம், கருப்பு கலரில் பேண்ட், கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். கையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பச்சை குத்தப்பட்டுள்ளது.
அவரது உடல் அருகே மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் புதிய செருப்பு ஓன்று கிடந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் பாளை திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லூர்துசாமி என்பது தெரிய வந்தது. இவர் பாளை புதிய பஸ் நிலையத்தில் மிட்டாய், வெள்ளரிக்காய்,கர்சீப், பேனா போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இரவு டாஸ்மாக் பார் அருகே நண்பர்களுடன் அவர் மது அரு்ந்தியுள்ளார். அப்போது அவர்களுள் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து நேராக டாஸ்மாக் பார்க்குள் சென்றது. பின்னர் புதிய பஸ் நிலைய வாசல் வரை சென்று விட்டு திரும்பியது.
இதனால் கொலையாளி பஸ் ஏறி தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகம எழுந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications