ஜெ.வுக்கு துரோகம் செய்த சசிகலாவை தண்டிக்க வேண்டும்: அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பு
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் மட்டுமல்ல பொதுமக்களும் ஆதரவு தந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டுக்கு தொண்டர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அமருவதற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாக திரளுவதால் ஆதரவு தெரிவிக்க வருபவர்கள் மற்றும் பன்னீர்செல்வத்தின் பேட்டி ஆகியவற்றை பார்ப்பதற்கு வசதியாக 3 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலி பெருக்கி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications