For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விக்கி விக்கி அழுதபடி ஆதரவு திரட்டிய ஏற்காடு அதிமுக வேட்பாளர் சரோஜா...!

Google Oneindia Tamil News

ADMK candidate cries in party meeting
வாழப்பாடி: வாழப்பாடியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏற்காடு தனித் தொகுதி வேட்பாளர் சரோஜா அழுதபடியே பேசி ஆதரவு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

வாழப்பாடியில் ஏற்காடு இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் வேட்பாளர் சரோஜா பெரும் சோகத்துடன் வந்திருந்து பேசினார். அவர் பேசும்போது தொடர்ந்து அழுதபடியே பேசினார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

சரோஜா பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற வேட்பாளராக ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்திட அனைவரும் சிறப்பாக உழைத்திட வேண்டும். நான் பெறும் வெற்றியை முதல்வரின் பொற்பாதங்களில் சமர்பிப்பேன்.

எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பணிவோடு வேண்டுகிறேன். நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் எனது கணவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து நடத்துவேன் என்றார்.

இப்போதுதான் முதல் முறையாக மேடையேறிப் பேசுகிறாராம் சரோஜா. இதனாலும், தனது கணவரின் நினைவாலும் அவர் தொடர்ந்து கேவிக் கேவி அழுதபடி பேசினார். அவரால் தொடர்ச்சியாக பேச முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் அவரை ஆறுதல்படுத்தி தொடர்ந்து பேச வைத்தனர்.

English summary
Yercaud ADMK candidate Saroja cried when she was speaking in the party meeting in Vazhapadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X