Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேட்பு மனுத்தாக்கலில் "சாதனை" படைக்கும் அதிமுக... தாக்கலான 6 மனுக்களில் பாதி அதிமுகவுடையது!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ். வளர்மதி இதுவரை 3 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மொத்தம் பெறப்பட்டுள்ள 6 வேட்பு மனுக்களில் பாதி இவரது வேட்பு மனுக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாளில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதியும், மாற்று வேட்பாளர் கோவிந்தனும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ADMK candidate files 3 set of nomination in Srirangam

முதல் நாளில் இவர்கள் போக தேர்தல் மன்னன் என்று செல்லப் பெயர் பெற்ற பத்மராஜன், திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகரன் ஆகியோர் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்தனர்

நேற்றைய 2வது நாள் இறுதியில், 2 சுயச்சைகள் மட்டும் மனுத் தாக்கல் செய்தனர். கூடவே வளர்மதியும், கோவிந்தனும் மீண்டும் மனுத் தாக்கல் செய்தனர்.

2 நாட்களில் மொத்தம் 6 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 3 மனுக்கள் வளர்மதியின் மனுக்களாகும். முதல் நாளில் அவர் 2 செட் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். நேற்று ஒரு செட் தாக்கலாகியது.

நாளை திமுக வேட்பாளர் என். ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். மற்ற கட்சிகள் நிலைப்பாடு தெரியவில்லை. பாஜக 2 நாட்களில் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+