"இலை" முடக்கம்.. தேர்தல் ஆணைய உத்தரவுக்கு ஸ்டே வாங்க முடியாதாம்!!
சென்னை: இரட்டை இலையை முடக்கி வைக்கும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து இடைக்காலத் தடை வாங்க முடியாது என்று சொல்லப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பி.எஸ் அணியும், சசிகலா குரூப்பும் உரிமை கோரின. இதற்காக தேர்தல் ஆணையத்தில் அவை முட்டி மோதின. ஆனால் யாருக்கும் சின்னம் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது.

இதனால் தற்போது தினகரனும், ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனனும் இரட்டை இலையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன. வேட்பு மனுத் தாக்கலும் முடியப் போகிறது. எனவே 329வது சட்டப் பிரிவுப்படி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற முடியாது என்று சொல்லப்படுகிறது.
அதுவும் கூட தமிழகத்தில் உள்ள எந்தக் கோர்ட்டுக்கும் போக முடியாது. மாறாக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே முறையிட முடியும். ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டதால், உச்சநீதிமன்றமும் அதில் தலையிடாது.
எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரு தரப்புமே சுயேச்சை சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டாக வேண்டும். வேறு வழியே இல்லை.












Click it and Unblock the Notifications