தினகரன் போட்டோவுக்கு நாமம்... சிரிப்பாய் சிரித்த அதிமுகவினர்... - வீடியோ
தினகரனின் மற்றவர்களை கட்சி பதவிலிருந்து நீக்குவதைக் கண்டித்து அவருக்கு எதிராக சிரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
கடலூர்: தினகரன் கட்சி பதவியிலிருந்து பலரை நீக்குவதைக் கண்டித்து அவரது புகைப்படத்துக்கு நாமம் இட்டு, சிரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
பிளவுபட்டுக்கிடந்த அதிமுக அம்மா அணியும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் இணைந்தன. ஆனால் இந்த இனைப்பை தினகரன் விரும்பவில்லை. அதனால் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என கூறி ஆளுநரிடம் மனுகொடுத்தனர். அதனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தனர்.
அதன் தொடர் நடவடிக்கையாக தினகரனுக்கு எதிராக பேசுகிற எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை கட்சி பதவிலிருந்து நீக்குவதாக தினகரன் அதிரடியாக அறிவித்து வருகிறார். இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமி அணியில் பலத்த சலசலப்பை உண்டாக்கி வருகிறது.
தினகரனின் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் 50 இடங்களில் சிரிப்புப் போரடடம் நடத்தப்பட்டது. அதில் தினகரன் போட்டோவுக்கு நாமம் இட்டு அனைவரும் கூடி சிரித்து நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர். சிதம்பரத்தில் நடந்த சிரிப்புப் போராட்டத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.