அதிமுக சில மாவட்ட நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுப்பா?
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிப்பது தொடர்பான ஆதரவு கடிதம் நிர்வாகிகளிடமிருந்து பெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சில மாவட்ட கட்சி நிர்வாகிகள் சென்னை விரைகிறார்கள்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க சசிகலா தரப்பு தீவிரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக் கடிதம் பெறும் வேலையை சசிகலா தரப்பு எடுத்துள்ளது.
அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலாதான் என்பது உறுதியாகி விட்டது. அவருக்கு எதிராக பெரிய அளவில் யாரும் குரல் கொடுப்பதாக தெரியவில்லை. கிட்டத்தட்ட அத்தனை பெருந்தலைகளும் சசிகலாவுக்கு ஆதரவாக திரும்பி விட்டனர்.

இதுவரை அதிமுக என்றால் அம்மா என்ற நிலை இருந்தது. இனி அது சின்னம்மா என்ற நிலைக்கு மாறப் போகிறது. இந்த நிலையில் வருகிற 20ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
இதையடுத்து பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள சில மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நகர, கிளை, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் அவசரமாக சென்னைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications