கொந்தளிப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு செப்.12ல் கூடுகிறது- வீடியோ
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுக அம்மா அணியும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் இணைந்ததையடுத்து தினகரன் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தினகரன் தரப்புக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும், தினகரன் ஸ்லீப்பர் செல்களாக தன்னுடைய ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளதாக கூறி வருகிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்த பின்பு இரு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும் அதுதொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும் எனவும் அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொது செயலாளர் தினகரன் ஆகியோர் நீக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.