தொழிலாளர் நல வாரியங்கள் அனைத்தையும் முடக்கியது அ.தி.மு.க. அரசு... கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை : தொழிலாளர் நல வாரியங்கள் அனைத்தும் முறையாகச் செயலாற்ற அனுமதிக்காமல் அ.தி.மு.க. ஆட்சி முடக்கி வைத்து விட்டதாக தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய தொழிலாளர் நல வாரியக் கூட்டங்களே அ.தி.மு.க. அரசில் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

கழக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக நடைபெற்ற பல்வேறு சிறப்பான பணிகள் மீண்டும் தொடர தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து புதிய விடியலை நோக்கிப் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தொழிற்சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை ஏற்று தொழிலாளர்களுக்கு வழங்கிய வாரிய அட்டைகளில் இடம் பெற்றிருந்த என்னுடைய படத்தை மாற்றி, "உழைப்பாளர் சிலை" படத்துடன் வாரிய அட்டைகளை வழங்கிட கழக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது தொழிலாளர்களின் எதிர்ப்புகளை மீறி "உழைப்பாளர் சிலை" மாற்றப்பட்டு, ஜெயலலிதாவின் படம் போட்டு அந்த அட்டைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் போற்றும் உழைப்பவர் மேன்மை, ஜெயலலிதா ஆட்சியில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது.
தி.மு. கழக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் பயிற்சி பெற செங்கற்பட்டில் "கட்டுமான உயர் பயிலகம்" ஒன்று தொடங்கப்பட்டது. தற்போது அதை நடைமுறைப்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பது அ.தி.மு.க. ஆட்சி.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காகப் பணியாற்றி வந்த திரு. பொன்குமார் அவர்களை, கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக நியமனம் செய்தது தி.மு. கழக அரசு.
மேலும் அனைத்து வாரியங்களுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப் பட்டு முறையாக வாரியக் கூட்டங்கள் நடைபெற்றது தி.மு. கழக ஆட்சியில். ஆனால் தற்போது எந்த வாரியத்திற்கும் தலைவர் நியமனம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய வாரியக் கூட்டங்களே அ.தி.மு.க. அரசில் நடைபெறவில்லை. அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்கள் அனைத்தும் முறையாகச் செயலாற்ற அனுமதிக்காமல் அ.தி.மு.க. ஆட்சி முடக்கி வைத்து விட்டது.
வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற பொன்குமார் முயற்சியால் அனைத்து மாவட்ட நல வாரிய அலுவலகங்களிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அமர்ந்து பணியாற்ற தி.மு. கழக ஆட்சியில் வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான அறையே காலி செய்யப்பட்டு விட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் அமைப்பு சாராத் தொழிலாளர் பல இலட்சம் பேருக்கான நலத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, தொழிலாளர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் அலட்சியப் படுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் தொழிலாளர் விரோத ஆட்சி தமிழகத்திலே நடைபெறுகிறது. இந்த நிலையை மாற்றினால் தான், தொழிலாளர்களுக்கான நல வாழ்வு உறுதியாகும் என்பதை உணர்ந்து அனைத்துப் பிரிவினரும் உழைத்திட வேண்டும்.
தர்மபுரியில் 12ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் இந்தக் கருத்துகள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டு, புத்தெழுச்சி உருவாக்கப்படுமென்று நம்புகிறேன். மாநாடு சிறப்பாகவும், பயனுள்ள முறையிலும் நடைபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகள் இந்த மாநாட்டில் பெருவாரியாகக் கலந்து கொண்டு அதன் வெற்றிக்காக உழைத்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.
கழக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக நடைபெற்ற பல்வேறு சிறப்பான பணிகள் மீண்டும் தொடர தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து புதிய விடியலை நோக்கிப் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications