மணி... மணி... கூவத்தூர் பணபேரம்... நக்கலாய் டுவிட்டிய திமுக எம்எல்ஏ
பணத்தால் பணத்துக்காக நடைபெறும் அதிமுக அரசு என்று திமுக எம்எல்ஏ தனது டுவிட்டர் பக்கத்தில் நக்கலாய் பதிவிட்டுள்ளார்.
சென்னை: சசிகலா அணிக்கு ஆதரவு தருவதற்காக கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசிய நேற்று வீடியோ பதிவு ஒன்று வெளியானது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட இந்த ஸ்டிங் ஆபரேசன் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சியினர் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இச்செய்தி வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் #MLAsForSale என்ற ஹேஷ்டேக் கீழ் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
A Govt shud be
— J Anbazhagan (@JAnbazhagan) June 12, 2017
For the people,
By the people &
To the people.
But ADMK govt is
For the Money,
By the Money &
To the Money.#MLAsForSale
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஓர் அரசு மக்களால் மக்களுக்காக இருத்தல் வேண்டும் ஆனால் அதிமுக அரசோ பணத்தால் பணத்துக்காக செயல்படும் மணி அரசாக இருக்கிறது என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.