For Daily Alerts
Just In
திருச்சி ஜெ. கூட்டத்துக்காக கொண்டு செல்லப்பட்ட அதிமுக தொப்பி, விசிறி பறிமுதல்!
சென்னை: திருச்சியில் இன்று நடைபெறும் முதல்வர் ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வோருக்காக கொடுக்க கொண்டு செல்லப்பட்ட அதிமுக தொப்பி, துண்டு, விசிறிகளை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
அதிமுக தொப்பி, விசிறிகள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேராவூரணி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதணை செய்தபோது பல மூட்டைகளில் அதிமுக தொப்பி, துண்டு, கை விசிறிகள் இருந்தது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இவை, திருச்சிக்கு ஜெயலலிதா பிரசாரத்துக்கு வரும்போது அவரது கூட்டத்திற்கு அழைத்து வரப்படுவோருக்காக கொடுக்க கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
English summary
Election squad officials have seized ADMK hats, towels seized near Pudukottai.
Story first published: Saturday, April 23, 2016, 12:42 [IST]