எதிர்ப்புகளை சரிகட்டி மதுசூதனன் வேட்பாளராக அறிவிப்பு... அதிமுக ஆட்சிமன்றக் குழு முடிவு!
அதிமுகவின் ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சி மன்றக் குழு கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.
Recommended Video

சென்னை : அதிமுகவின் ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் இந்த முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூததன் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விருப்பம் தெரிவித்தது. ஆனால் இதற்கு முதல்வர் பழனிசாமி தரப்பில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விருப்ப மனு அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது வரை மதுசூதனன், கோகுல இந்திரா, பாலகங்கா உள்ளிட்டோர் இந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிகிறது. மொத்தம் 27 பேர் விருப்பமனுக்களை அளித்திருந்த நிலையில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூடி ஆலோசித்தது.

ஆட்சி மன்ற கூட்டம்
ஆட்சி மன்றக் குழுவில் ஏற்கனவே உள்ள 7 பேருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி உள்ளிடோர் ஆட்சி மன்றக் குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வளர்மதி, அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2 மணி நேரம் ஆலோசனை
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசைக்குப் பிறகு அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்தி மதுசூதனனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆர்கே நகர் தொகுதியில் மதுசூதனன், தினகரன், மருதுகணேஷ் உள்ளிட்டோருக்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மதுசூதனன்
அதிமுக இரு அணிகளாக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அணியை ஆதரித்த மதுசூதனன், அதிமுகவின் அவைத்தலைவராக 2 வது முறையாக தொடர்ச்சியாக இருந்து வருகிறார். 1991ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அரசில் கைத்தறித்துறை அமைச்சராகவும் மதுசூதனன் இருந்துள்ளார்.

மூத்த நிர்வாகி மதுசூதனன்
அதிமுகவில் அமைப்புச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை மதுசூதனன் வகித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகியான இவர் ஆர்கே நகர் தேர்தலில் எவ்வளவு வாக்குகள் பெறப்போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications