நானும், விஜயகாந்தும் தோற்க வேண்டும் என தீயாக வேலை செய்யும் அதிமுக: திருமாவளவன்
சிதம்பரம்: தானும், விஜயகாந்தும் தோல்வி அடைய வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் தீவிரமாக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் கருப்பு பணம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் பிற தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரண நடத்த வேண்டும்.
புதிய வாக்காளர்கள் 1 கோடி பேர் வாக்களிக்க பணம் பெறுவதை அறுவெறுப்பாக நினைக்கிறார்கள். நானும், விஜயகாந்தும் தோல்வி அடைய வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் காட்டுமன்னார்கோவில் மற்றும் உளுந்தூர்பேட்டையில் வேலை செய்கிறார்கள்.
ஆளுங்கட்சியினரையும் மீறி மக்கள், கட்சிகளை சாராதவர்கள் எங்களை வெற்றி பெற வைப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications