For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக வேட்பாளர் மீது அதிமுக பிரமுகரே புகார்.... வீட்டைக் காலி செய்ய சொல்லி மிரட்டுவதாக!

Google Oneindia Tamil News

ADMK man charges ADMK's Nellai candidate of threat
நெல்லை: நெல்லை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.ஆர்.பி. பிரபாகரன் மீது அதிமுக பிரமுகரே புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் கே.ஆர்.பி. பிரபாகரன். இவர் மீது ஆலங்குளத்தை அடுத்துள்ள பெத்தநாடார்பட்டியை சேர்ந்தவர் கலிங்கராயன் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். இவர் முன்னாள் அதிமுக பொறுப்பாளர் ஆவார்.

இவர் தனது மனைவி பூவம்மாள் மற்றும் இருமகன்கள் ஆகியோருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் தாங்கள் கீழப்பாவூரில் அரிசி வியாபாரம் செய்து வந்ததாகவும்,அபோது தங்களுக்கு சொந்தமான வீட்டை முருகன் என்பவரிடம் அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தோம்.

இதுதொடர்பாக தென்காசி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததாகவும் அந்த வழக்கை தனது சார்பில் பிரபாகரனிடம் நடத்த சொன்னதாகவும், உரிய நேரத்தில் வாங்கிய கடனை செலுத்திய நிலையில் எனது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முருகனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தனது வீடு ஏலம் போனதகவும் ,தற்போது வீட்டை காலி செய்ய கூறி மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார்.

புகாரை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், நெல்லை மாவட்ட எஸ்.பி.,விசாரணைக்கு அனுப்பிவைத்தனர். இந்த புகார் குறித்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரன் கூறுகையில், 2006ல் நடந்ததாக கூறப்படுவது அனைத்தும் தவறான தகவல். எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை கிடைத்ததை பொறுத்துக்கொள்ளாத சிலர் மேற்கொள்ளும் செயலாகும் .

நான் சிவில் வழக்குகளில் ஆஜராக மாட்டேன். கட்சிக்காரர் என்ற முறையில் கலிங்கராயன் வழக்கை வேறு ஒரு வக்கீலிடம் கூறி நடத்த சொன்னேன். இதற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது என்றார்.

English summary
An ADMK from Nellai has given complaint against the ADMK's Nellai candidate of threatening to vacate his house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X