நிவாரணப் பொருட்களை "அம்மா" தொகுதி குடோனில் பதுக்கிய அதிமுகவினர்.. மக்கள் கொந்தளிப்பு
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு இடங்களிலிருந்து வந்த நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் கைப்பற்றி முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள கிட்டங்கியில் பதுக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திருட்டுத்தனத்தையடுத்து மக்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் குதித்தனர்.
வெள்ள நிவாரணப் பொருட்களையும் திருடித் தின்னும் அதிமுகவினரால் மக்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர். கன மழை மற்றும் செம்பரம்பாக்கம் வெள்ளத்தால் சென்னையே சின்னாபின்னமாகிப் போனது. அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கி சிதைந்தன.

ஆனால் இந்த பகுதி மக்களுக்காக பல்வேறு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்த கொடுத்த நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் திருடர்கள் போல புகுந்து வழிப்பறி செய்ததும், அதில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டியும் நடந்து கொண்ட செயல் மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது.
இன்னும் அதிமுகவினரின் அட்டகாசம் முடியவில்லை. ஆர்.கே.நகரில் உள்ள சுந்தரம்பிள்ளை தெருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து 800 பேருக்கு வழங்க 16 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வந்திறங்கின. ஆனால் அதிமுகவினர் அவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் குடோனில் வைத்து பதுக்கியதாக புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் சந்தானத்திடம் இதுதொடர்பாக கேட்டுள்ளனனர். அதற்கு அவர் நிவாரணப் பொருட்கள் பாதி திருடு போய் விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் குடோனை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பாதிக்கப்பட்ட மக்கள் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், 800 பேருக்கு உண்டான நிவாரணப் பொருட்கள் வந்தது. அதனை விநியோகிக்க டோக்கன் தரப்படவில்லை. கேட்டால் பாதி திருடு போய் விட்டதாக கூறுகின்றனர்.
குடோனில் இருக்கும் ஆட்கள் அனைவரும் அதிமுகவினர். பூட்டியுள்ள குடோனில் எப்படி பொருட்கள் காணாமல் போகும். தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை அதிமுகவினல் பதுக்கி வைக்கின்றனர். அதனை சிலவற்றை எடுத்துக்கொண்டு தருகின்றனர். தொண்டு நிறுவனங்கள் வழங்கிய பொருட்களை நாங்கள் தருகின்றோம் என்று ஆளும் கட்சியினர் பொய் கூறுகினறனர் என்று மக்கள் குமுறல் வெளியிட்டனர்.
என்ன பிழைப்போ இது.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications